நிதி நிறுவனங்களுக்கான பேமெண்ட் தீர்வுகள்

நிதி சேவைகள்

புதிய இயல்பு வாழ்வு முறையை ஏற்றுக்கொள்ளத் துவக்கிய இக்காலகட்டத்தில், பல மாற்றங்களையும் நாம் ஏற்க வேண்டியுள்ளது. ஆனால் சில விஷயங்களை நிறுத்த முடியாது. வாடிக்கையாளர்கள் தங்கள் நிதி முதலீடு சார்ந்த திட்டங்களைத் தொடரும் சூழலில், நிதி சேவை வழங்குநர்கள் தங்கள் செயல்பாடுகளை நிறுத்துவது என்பது முடியாத ஒன்று. நிதி சேவைகளுக்கான ஸ்மார்ட்ஹப் - தடையின்றி பேமெண்ட்களைப் பெற நிதிசார் சேவை வழங்குநர்களுக்கான தனித்துவமான ஒரு பேமெண்ட் கேட்வே!

ஸ்மார்ட்ஹப் நிதி சேவைகள் உடன், நிதி நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் ஆகிய நிறுவனங்களும் பட்டயக் கணக்காளர்களும் வாடிக்கையாளர்களிடமிருந்து தொடர்ந்து பேமெண்ட் பெறலாம். எனவே நீங்கள் தொழில் புரிந்துகொண்டிருந்தால், உங்கள் தேவைகளுக்கு ஏற்றவாறு உங்கள் பேமெண்ட் செயல்முறைகளை மாற்றியமைக்கலாம்.

அம்சங்கள்

  1. பல பேமெண்ட் முறைகள்: நிதி நிறுவனங்களுக்கான இந்த பேமெண்ட் தீர்வுடன், டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள், எம்.பி.ஓ.எஸ், யூ.பி.ஐ மற்றும் இ-வாலட்கள் மூலம் காப்பீட்டு ப்ரீமியம்கள் மற்றும் பரஸ்பர நிதிகளுக்கான பணமில்லா பேமெண்ட்களை நீங்கள் செயல்படுத்தலாம்.
  2. ஸ்டாண்டிங் இன்ஸ்ட்ரக்ஷன் வசதி: உங்கள் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கார்டு சார்ந்து ஆன்லைன் ஸ்டாண்டிங் இன்ஸ்ட்ரக்ஷன்களைச் செயல்படுத்தலாம்.
  3. எளிதான மற்றும் பாதுகாப்பான பரிவர்த்தனைகள்: ஸ்மார்ட்ஹப் வழியாக அவர்கள் செலுத்தும் அனைத்து ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனைகளும் பாதுகாப்பாக மேற்கொள்ளப்படுவதை நீங்கள் உறுதியாக நம்பலாம்.

நன்மைகள்

  • பேமெண்ட் வசூல் குறித்த தனிப்பயனாக்கப்பட்ட நினைவூட்டல்களை எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்புங்கள்
  • எஸ்.எம்.எஸ் மூலம் பேமெண்ட் வசூல் இணைப்புகளைப் பகிருங்கள்
  • காலங்கடந்த பேமெண்ட் குறித்த சிக்கல்களைக் குறைத்து அதை திறம்பட நிர்வகியுங்கள்
  • வாடிக்கையாளர்களுக்கு ஸ்டாண்டிங் இன்ஸ்ட்ரக்ஷன் வசதியை அளியுங்கள்
  • ரொக்கம் மற்றும் காசோலைகளைக் கையாள வேண்டிய அவசியத்தைக் குறையுங்கள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஸ்மார்ட்ஹப் பேமெண்ட் தீர்வைப் பயன்படுத்த, நிதிசார் சேவை வழங்குநர்கள் எச்.டி.எஃப்.சி வங்கிக் கணக்கைக் கொண்டிருக்க வேண்டுமா?

ஆம், ஸ்மார்ட்ஹப் நிதி சேவைகளைப் பயன்படுத்த, நீங்கள் ஒரு எச்.டி.எஃப்.சி வங்கி கணக்கை பதிவு செய்து திறக்க வேண்டும்.

ஸ்மார்ட்ஹப் நிதி சேவைகள் வணிகங்களுக்கு எவ்விதத்தில் உதவுகின்றன?

ஸ்மார்ட்ஹப் நிதி சேவைகள், பேமெண்ட் சேகரிப்பு மற்றும் நிர்வாகத்தை அதிக முயற்சியில்லாமல் செய்ய உதவுகின்றன. பணம் மற்றும் காசோலைகள் பெறுவதை குறைத்து நீங்கள் நிகழ் நேரத்தில் பேமெண்ட்டை ஏற்கலாம்.

ஸ்மார்ட்ஹப் நிதிசார் சேவைகள் மூலம் காப்பீட்டு ப்ரீமியங்கள் மற்றும் பரஸ்பர நிதிகளுக்கான பேமெண்ட்டை எனது வாடிக்கையாளர்கள் ஏன் டெபிட் கார்டு மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்?

டெபிட் கார்டு பேமெண்ட்கள் ஓ.டி.பிக்கள் மற்றும் பின்கள் வழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன, இது உங்களுக்கும் உங்கள் வாடிக்கையாளர்களுக்கும் பாதுகாப்பானதாக இருக்கும்.

கார்டுகள் மீது ஆன்லைன் ஸ்டாண்டிங் இன்ஸ்ட்ரக்ஷன் வசதியை வாடிக்கையாளர்கள் ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

கார்டுகளில் ஆன்லைன் நிலையான வழிகாட்டுதல்களை தேர்வு செய்தல் மூலம் உங்கள் வாடிக்கையாளரால் தடையின்றி மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பிக்களை செலுத்த முடியும். இது எல்லா பேமெண்ட்களும் சரியான நேரத்தில் தங்கள் கணக்குகளிலிருந்து பற்று வைக்கப்படுவதை உறுதிசெய்கிறது, மேலும் தாமதமாக செலுத்துவதிலிருந்தும் பாதுகாக்கிறது.

நிதி சேவை வாடிக்கையாளர்களுக்கான வெவ்வேறு பேமெண்ட் வசூல் முறைகள் யாவை?

கார்டுகளைத் தவிர, டிஜிபி.ஓ.எஸ், வயர்லெஸ் கார்டு ஸ்வைப் இயந்திரங்கள் (ஜி.பி.ஆர்.எஸ்) மற்றும் மொபைல் கார்டு ஸ்வைப் இயந்திரங்கள் (எம்.பி.ஓ.எஸ்) போன்ற கடையில் உள்ள பேமெண்ட் அமைப்புகள் மூலம் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தலாம்.


நம்பகமான ஒரு பார்ட்னருடன் இணைந்து டிஜிட்டல்மயத்துடன் வளர்ச்சி அடையுங்கள்

தொடர்பு கொள்ளுங்கள்

பதிப்புரிமை © 2021 எச்.டி.எஃப்.சி வங்கி லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

மேல்